search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுதிறனாளியை கர்ப்பமாக்கிய தொழிலாளி"

    பாகூர் அருகே திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி மாற்று திறனாளியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் தேடிவருகிறார்கள்.

    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங்குப்பத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் உறுவையாறு அருகே களிச்சிகுப்பத்தை சேர்ந்த தனது தங்கை மகள் மாற்றுதிறனாளி பெண்ணை சிறுவயது முதல் வளர்த்து வந்தார். 37 வயதாகும் அந்த பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி தங்கராசு (40) என்பவர் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தைகூறி உல்லாசம் அனுபவித்து வந்தார்.

    இதில் அந்த பெண் 8 மாத கர்ப்பமானார். இதையடுத்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறு தங்கராசுவிடம் பலமுறை லட்சுமணன் வலியுறுத்தியும் அதற்கு தங்கராசு மறுத்து வந்தார். இதையடுத்து லட்சுமணன் இதுபற்றி பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரன் வழக்குபதிவு செய்து தங்கராசுவை தேடிவருகிறார்.

    இதற்கிடையே திருமணம் செய்வதாக மாற்றுத்திறனாளி பெண்ணை கர்ப்பமாக்கிய தங்கராசுவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×